close
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin

இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.

இந்த கோவிலின் வரலாறு சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது…

ஒரு ஆறு தலைமுறை இருக்கும்…

முதன் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் காவடி எடுத்து வருவதாக வேண்டிக் கொண்டு இருந்தால் (நேர்த்திக் கடன், அல்லது நேர்ந்து கொண்டிருந்தால்) அவர்கள் நோன்பு இருப்பதற்காக காவடிக்கூடம் என்று சிறு குடிசை ஒன்று போட்டு அதனுள் விரதம் இருந்து பிறகு நேர்த்தி கடனான காவடி எடுத்துச் சென்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

அவ்வாறே செயல்பட்டு வந்து கொண்டிருந்த பிறகு சிறிது காலம் யாரும் காவடி எடுக்காமல் அப்படியே கைவிடப்பட்டு சிலைகளோ வேறு வழிபாடுகளோ இல்லாமல் சில காலம் இருந்தது.

பிறகு சுமார் 60 வருடங்களுக்கு முன்பாக சிறு கோயில் ஒன்றை நிர்மாணித்தனர்.

தங்கள் வீடுகள் எல்லாம் ஓலை குடிசையில் இருந்தாலும் முருகனுக்காக காரை கட்டிடம் கட்டப்பட்டு அதனுள் வேல் வைக்கப்பட்டு வேல் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

வாராவாரம் வெள்ளிக்கிழமை பூஜைகளும் நடைபெற்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

பின் மீண்டும் சில காலம் பூஜைகள் அற்றுப்போன பின்பு பிறகு அக்கட்டிடம் பழுதடைந்தபடியால், தற்போது முருகன் கோவிலாக காணப்படும் இக்கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரின் பெரும் முயற்சியில் நன்கொடைகள் வசூலித்து கட்டப்பட்டது. மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது வரை நன்முறையில் நிர்வாகிக்கப்பட்டு வருஷாபிஷேகமும் வார பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது.

இக்கோவில் அமைந்துள்ள தெரு காரணப் பெயராகும் காவடிக்கூடம் இருந்தபடியால் இது காவடி தெரு என்று அழைக்கப்படுகிறது.

இங்கே முருகனுக்கு வேல் இடும்பனுக்கென்று ஒரு பீடமும் பிள்ளையாருக்காக ஒரு படமும் இக்கோவிலுள் உள்ளது.

நீங்கள் தூத்துக்குடிக்கு செல்லும் போது குடும்பத்துடன், ​​இந்த முருகன் கோவிலுக்கு சென்று நலமும் செல்வமும் பெற பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

முருகன் – என்றும் கருணையுள்ள தமிழ்க் கடவுள்

முருகன் சக்தி மற்றும் பலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபட்டு, வழிபடுபவர் பலம் பெறலாம். முருகன் பிறந்த ஏழாவது நாளில் தாரகாசுரனை அழித்தார். அவர் இந்து கடவுள்களில் மிகவும் ஆண்பால் மற்றும் கடுமையானவராக அறியப்படுகிறார்.

தனது வீரத்திற்கும், தர்மத்தின் பாதுகாவலராகவும் அறியப்பட்ட முருகன், க்ரௌஞ்சன், பாணாசுரன் மற்றும் பிரலம்பா போன்ற பல அரக்கர்களைக் கொன்றுள்ளார். அவர் எப்போதும் இளமையுடன் இருக்கிறார்,
இது அவருக்கு குமார (இளமைக்கான சமஸ்கிருதம்) என்ற பெயரைக் கொடுக்கிறது. ஷடானனாக, முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஐந்து புலன்கள் மற்றும் மனதைக் குறிக்கும்.

ஆறு தலைகளும் அவருக்கு எல்லா திசைகளிலும் ஒரு கண் வைத்திருக்க உதவுகின்றன, இதனால் அவர் எந்த திசையிலிருந்தும் வரும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட முடியும். ஆறு முகங்களைக் கொண்ட போர்க் கடவுளாக, முருகன் தனது பக்தர்களுக்கு லோபம் (பேராசை), காமம் (செக்ஸ்), க்ரோத் (கோபம்), மோஹம் (ஆவேசம்), மடம் ஆகிய தவறான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் கெட்ட மனிதர்களை எதிர்த்துப் போரிடக் கற்றுக்கொடுக்கிறார். (ஈகோ), மற்றும் மாட்சர்யா (பொறாமை).

Tags :ஊர் திருக்கோவில்கள்காவடி தெருதமிழ் கடவுள்முருகன் கோவில்

Leave a Response