தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊரில் பொங்கல் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது அதில் இளைஞர் கபடி போட்டியில் இரு அணிகள் மோதியது.
அதில் அணியின் பெயர்கள் முறையே Lion Boys மற்றும் Bullet Boys. இரு அணி வீரர்களும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இறுதியில் Lion Boys அணியினர், Bullet Boys அணியின் சார்பாக கபடி பாடி வந்த ஆட்டக்காரரை பிடித்து விட்டார்கள்.
ஆனால் நேர்மாறாக பிடிபட்ட வீரருக்கான Bullet Boys அணியினருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது. இது போன்ற செயல்கள் நேர்மையாக நடத்தப்படும் ஆட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இது போன்ற ஒருதலைப்பட்சமான தவறான செயல்பாடுகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டிய விளையாட்டு போட்டிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஊர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.



