உமரிக்காடு , ஜன 10-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு கிராமத்தில் 2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் காமராஜர் இளைஞர் அணி சார்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கல் பெருவிழா சிறப்பு விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசினை அள்ளுங்கள்.



உமரிக்காடு ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு , பெண்கள், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு என பிரத்யேமாக நடத்தப்படயிருக்கின்றன.
அதேபோல் பெண்களுக்கான சிறப்பு கோலப்போட்டி, சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், கோழி பொறுக்குதல், பலூன் உடைத்தல், பாட்டில் நீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன், கபாடி, இறகுப்பந்து, கிரிக்கெட், மினி மாரத்தான், கயிறு இழுத்தல், உறி அடித்தல், இசை நாற்காலி, அதிர்ஷ்டவட்டம் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவும், கண்டு மகிழவும் மக்கள் அனைவரும் திரண்டு வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஓர் பொதுமக்கள் மற்றும் நிர்வாக கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்!

